Saturday, July 3, 2010

கர்ண பரம்பரைக்கதைகள்

கர்ண பரம்பரைக் கதைகள் :

அதென்ன கர்ண பரம்பரைக் கதைகள்? கர்ணனின் பரம்பரைக் கதைகளா? இல்லை பல நெடுங்காலங்களாக நம் முன்னோர்களால் செவி வழிக் கதைகளாக சொல்லப் பட்டு வரப் படும் கதைகளே கர்ணபரம்பரைக் கதைகள்.இப்படி இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்கிலெடுத்தால் லட்சக் கணக்கில் கதைகள் தேறும் .இந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன,பெரும்பாலும் வீரத்தில் சிறந்து விளங்கிய அன்றைய ஆண்கள் அல்லது பெண்களைப் பற்றிய கதைகளே இவை.

காத்தவராயன் கதை
மதுரை வீரன் கதை
பொம்மக்கா,திம்மக்கா கதைகள்
சுடலை மாடன் கதை

இப்படி சில உதாரணங்களை கூறலாம்.

இதிகாசங்களின் கிளைக் கதைகளாக கூறப் படுபவை சிலவும் கூட கர்ண பரம்பரைக் கதைகளாக இருக்கலாம் என்ற ஐயம் உண்டு,மூலக் கதைகளில் இருந்து பிரிந்து கதையோடு ஒட்டாமல் கதை மாந்தர்களோடு மட்டும் ஓரிழை தொடர்பில் பல கதைகள் காப்பியங்களிலும் இதிகாசம் மற்றும் புராணங்களிலும் விரிகின்றன.அவை நீதிக் கருத்துகளை சுட்டிக் காட்டவோ அல்லது கதை மாந்தர்களின் பூரணத்துவத்தை பிரஸ்தாபிக்கவோ இந்த விதமாக கூறப் படும் கதைகள் அதாவது ஆதாரங்கள் எதுவும் இன்றி மிகப் பெரிய கதைகளைத் தழுவி செவி வழிக் கதைகளாகக் கூறப் படுபவை கர்ண பரம்பரைக் கதைகள் எனப்படுகின்றன.

வேறு உதாரணங்கள் இருப்பின் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment